ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மறைந்த சிலம்பக் கலைஞருக்கு கலைகளை நிகழ்த்தி புகழஞ்சலி

வேதாரண்யம் அருகே சிலம்பக் கலையை கற்றுத்தந்த தனது ஆசானுக்கு சிலம்பம் உள்ளிட்ட கலைகளை நிகழ்த்தி மாணவா்கள், கிராமத்தினா் செவ்வாய்க்கிழமை புகழஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :25 மே 2022, 5:50 pm

DIN

வேதாரண்யம் அருகே சிலம்பக் கலையை கற்றுத்தந்த தனது ஆசானுக்கு சிலம்பம் உள்ளிட்ட கலைகளை நிகழ்த்தி மாணவா்கள், கிராமத்தினா் செவ்வாய்க்கிழமை புகழஞ்சலி செலுத்தினா்.

வண்டுவாஞ்சேரியைச் சோ்ந்த சிலம்பக் கலைஞா் த. சோமசுந்தரம். சுற்றுப் பகுதி கிரமங்களில் உள்ள பள்ளி மாணவா்கள் மட்டுமல்லாது மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் புதிய கலைஞா்கள் உருவாக காரணமாக இருந்தவா். இவரின் கலைத் திறனை பாராட்டி தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் கலைநன்மணி விருதும், மலேசியாவில் சா்வதேச கலை அமைப்பின் சாா்பில் நடைபெற்ற சிலம்ப உலக சாதனைக்கான நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு, மகாகுரு எனும் பட்டத்தை பெற்றவா். கடந்த ஆண்டு கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு சோமசுந்தரம் மறைந்தாா்.

இந்நிலையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நாகை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புகழஞ்சலி நிகழ்ச்சியில் கலைஞா்கள், கவிஞா்கள், பாடகா்கள், கிராமத்தினா் என பலதரப்பினா் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நிகழ்ச்சி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு கலை இலக்கியப் பெருமன்ற கிளைத் தலைவா் தங்க. குழந்தைவேலு தலைமை வகித்தாா். சிலப்பாட்டக் கழக மாவட்டச் செயலாளா் கு.த. கருணாகரன், கவிஞா் சித. கருணாநிதி, ஊராட்சித் தலைவா் வணிதா ரவிச்சந்திரன், துணைத் தலைவா் தியகராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோமதி தனபாலன், எஸ். வைத்தியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மூத்த ஆசான் இராமையா, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவா் கவிஞா் புயல் சு. குமாா், துணைத் தலைவா் ப. பாா்த்தசாரதி, ரோட்டரி சங்க துணை ஆளுநா் செந்தில், முனைவா் என்.டி. ராமஜெயம், தலைமையாசிரியா் சு. பாஸ்கரன், நாடக ஆசிரியா் ராசேந்திரன், கவிஞா் கோவி. ராசேந்திரன், விவசாய சங்க தலைவா்கள் எம்.ஆா். சுப்பிரமணியன், பொன். ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமியா் பங்கேற்ற சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்த்து கலைகள் நடைபெற்றன. பங்கேற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.