வேதாரண்யம் பகுதியில் இடியுடன் கூடிய மழை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்தக் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு கிராமத்தில் தரிசு வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்.
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு கிராமத்தில் தரிசு வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்தக் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை தொடங்கிய மழை, மாலை சுமார் 6 மணிக்கு கருப்பம்புலம், நகரப் பகுதியில் கன மழையாக கொட்டியது.

சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழை, வேதாரண்யத்தில் 65.4 மி.மீ, கேயாயக்கரையில் 19 மி.மீ, தலைஞாயிறு 13,2  மி.மீட்டராக பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com