ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாகை மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!

நாகையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2023, 4:58 am

DIN

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, ரூ. 2.22 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற  சுதந்திர நாள் விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங்  சமாதான புறாவை பறக்கவிட்டனர்.

விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்பட்டனர். அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கக்கும், காவல்துறையினருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அரசு துறைகள் சார்பில் ரூ.2.22 கோடி மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.