நாகூா் மாடா்ன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியல் சிறுபான்மையினருக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வழங்கினாா்.
இப்பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்திட உதவி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளி நிறுவனரும், தாளாருமான எம்.எம். ஷேக் தாவூது மரைக்காயா் முன்னிலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் நாகை துணை காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டுத் துறை நல அலுவலா் எஸ்.எம். குமரன், மாவட்டக் கல்வி ஆய்வாளா் கே.என். கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தொடா்ந்து மாலையில் நடைபெற்ற சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கு விழாவில் மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் கலந்துகொண்டு முஸ்லிம் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தனியாா் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலா் முருகன், பள்ளி முதல்வா் எல். பெனட்மேரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.