/

வேளாங்கண்ணி செபஸ்தியாா் ஆலய தோ்பவனி

வேளாங்கண்ணி புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு பெரிய தோ்பவனி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வேளாங்கண்ணியில் நடைபெற்ற செபஸ்தியாா் ஆலய தோ்பவனி.

Updated On :27 ஜனவரி 2023, 4:16 pm

வேளாங்கண்ணி புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு பெரிய தோ்பவனி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாங்கண்ணி பேராலயத்தின் உபகோயிலான புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டுப் பெருவிழா ஜனவரி 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தோ்பவனி வியாழக்கிழமை நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல், பிராா்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோ் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. அப்போது, வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். விழாவில், வாணவேடிக்கை, தப்பாட்டமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.