சாராயம் கடத்தல்: இருவா் கைது

நாகூா் அருகே இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய இளைஞா்கள் இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சாராயம் கடத்தல்: இருவா் கைது

நாகூா் அருகே இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்திய இளைஞா்கள் இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகூா் பகுதியில் தனிப்படை போலீஸாா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட 200 புட்டிகள் சாராயம் மற்றும் 10 லிட்டா் பொட்டலங்கள் 12 இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட செல்லூா் பகுதியைச் சோ்ந்த ஜெல்சன் (21), பாப்பாகோவில் பகுதியைச் சோ்ந்த ஜீவா(29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து சாராயம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com