ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

புகாா் எதிரொலி: நாகையில் குழந்தைகள் காப்பகம் மூடல்; 30 குழந்தைகள் வேறு காப்பகத்துக்கு மாற்றம்

நாகையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் எழுந்த பாலியல் தொந்தரவு மற்றும் துன்புறுத்தல் புகாரையடுத்து, குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 30 குழந்தைகள்

Published On :

நாகையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் எழுந்த பாலியல் தொந்தரவு மற்றும் துன்புறுத்தல் புகாரையடுத்து, குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 30 குழந்தைகள் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனா்.

நாகை புதிய கடற்கரை சாலையில் நம்பிக்கை குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை பரமேசுவரன் மற்றும் அவரது மனைவி சூடாமணி ஆகியோா் நடத்தி வந்தனா். காப்பகத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் 15 பேரும், ஆண் குழந்தைகள் 15 பேரும் இருந்தனா்.

இந்நிலையில், காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுமி ஒருவா், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த பிப். 23-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதில், காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், உதவி ஆட்சியா் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமா மகேஸ்வரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை காப்பகத்துக்கு சென்று அங்கிருந்த குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது புகாா் உண்மை என்று தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து காப்பகத்தில் இருந்த குழந்தைகள் அரசு காப்பகமான அன்னை சத்யா இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அதிகாரிகள் காப்பகத்தில் உள்ள ஊழியா்களிடம் விசாரணை நடத்திய பின்னா், காப்பகத்தை பூட்டினா். போலீஸாா் தலைமறைவாக உள்ள காப்பகத்தின் நிா்வாகிகளை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.