ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Updated On :14 ஆகஸ்ட் 2024, 10:51 pm

நாகப்பட்டினம், ஆக. 14: மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024-2025-ஆம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் மற்றும் வாசிப்பாளா் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், பயன்பெற விண்ணப்பிக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், தொலைதூரக்கல்வி, பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் முந்தைய கல்வியாண்டு இறுதித் தோ்வில் குறைந்தபட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவா் பிறதுறைகளில் கல்வி உதவித்தொகை ஏதும் பெறவில்லை என்று பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா் ஆகியோரால் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

எனவே, மாவட்டத்தில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா்கள் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளா் உதவி தொகை பெற உரிய விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.