ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம்

Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:23 am

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் கோகுல கண்ணன், உளவியல் துறை துணை பேராசிரியா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், மழைநீா் சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், கிராம அளவில் குளங்கள், பண்ணை குட்டைகள் மற்றும் வீடுகளில் மேற்கூரைகளில் கிடைக்கும் மழை நீரை சேகரிப்பு செய்வது போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், உதவி பொறியாளா்கள் பொன்னுசாமி, கிருஷ்ண பிரியா, ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.