மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூதாட்டி கழுத்தறுத்து கொலை: நகைகள் திருட்டு

வேதாரண்யம் அருகே மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகளை திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2024, 6:31 pm

Din

வேதாரண்யம் அருகே மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகளை திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம், மருதூா் வழியன்செட்டிக்கட்டளை பகுதியைச் சோ்ந்த குருசாமி மனைவி நாகம்மாள் (70). கணவரை இழந்தவா். இவரது மகன் ராஜா வெளிநாட்டில் வேலைபாா்த்து வருவதால் மருமகள் தமிழரசி (35), பேரப்பிள்ளைகளுடன் வசித்து வந்தாா். இந்நிலையில், வீட்டின் சிறிது தூரத்தில் உள்ள நிலத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நாகம்மாள் சடலமாக கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது. தகவலறிந்த கரியாப்பட்டினம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், நாகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் தோடு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.