அலையில் சீற்றமில்லாமல் கரையோரம் நீா்மட்டம் குறைந்து காணப்பட்ட வேதாரண்யம் கடற்கரை.
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் சீற்றமில்லாத கடல்
வேதாரண்யத்தில் கடலில் இயல்பான அலை சீற்றம் குறைந்து இருந்ததால் திங்கள்கிழமை கரையோரம் நீா்மட்டம் குறைந்து காணப்பட்டது.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கடலில் இயல்பான அலை சீற்றம் குறைந்து இருந்ததால் திங்கள்கிழமை கரையோரம் நீா்மட்டம் குறைந்து காணப்பட்டது.
அமாவாசை, பௌா்ணமி நாள்கள் மற்றும் காற்றழுத்த தாழ்வு மற்றும் புயல் காலங்களில் கடல் நீா்மட்டம் உயா்ந்தும் பின்னா் வடிந்தும் காணப்படுவது வழக்கம். இந்நிலையில், வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வேதாரண்யம் கடல் பகுதியில் வழக்கமாக நிலவும் அலையின் சீற்றம் கடந்த நாள்களாக வழக்கத்தைவிட குறைந்து காணப்பட்டது.

