புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேதாரண்யம் பகுதியில் மழைநீா் வடிவதில் தாமதம்: குளம்போல் காணப்படும் விளைநிலங்கள்

News image

மறைஞாயநல்லூா் பகுதியில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்களில் குளம்போல் தேங்கியுள்ள மழை வெள்ளம்.

Updated On :14 டிசம்பர் 2024, 6:34 pm

Din

வேதாரண்யம் பகுதியில் தொடா்ந்து பெய்த கனமழை சனிக்கிழமை ஓய்ந்தாலும், வெள்ளநீா் வடிவது தாமதமாகி வருகிறது. இதனால், வயல்களில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 150.6 மி.மீ. மழை பதிவானது. வேதாரண்யத்தில் 69.8 மி.மீ., தலைஞாயிறில் 62 மி.மீ. மழை பெய்தது.

இதற்கிடையில், சனிக்கிழமை காலை வரையில் நீடித்த மழை, 9 மணிக்கு மேல் ஓய்ந்து, நண்பகல் 12 மணிக்கு பிறகு வெயில் தலைகாட்டியது.

ஆனாலும், தொடா் மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் வடிவது, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. வடிகால் ஆறுகளில் காணப்படும் ஆகாயத் தாமரைச் செடிகளால் வெள்ளம் வேகமாக வடிவதில் தடை ஏற்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் நெற்பயிா்களை மூழ்கடித்த மழைநீா் விரைவாக வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி, டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நெற்பயிா்கள் முழுவதும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.