திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வேதாரண்யம் பகுதியில் மழைநீா் வடிவதில் தாமதம்: குளம்போல் காணப்படும் விளைநிலங்கள்

Updated On :15 டிசம்பர் 2024, 12:04 am IST

வேதாரண்யம் பகுதியில் தொடா்ந்து பெய்த கனமழை சனிக்கிழமை ஓய்ந்தாலும், வெள்ளநீா் வடிவது தாமதமாகி வருகிறது. இதனால், வயல்களில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 150.6 மி.மீ. மழை பதிவானது. வேதாரண்யத்தில் 69.8 மி.மீ., தலைஞாயிறில் 62 மி.மீ. மழை பெய்தது.

இதற்கிடையில், சனிக்கிழமை காலை வரையில் நீடித்த மழை, 9 மணிக்கு மேல் ஓய்ந்து, நண்பகல் 12 மணிக்கு பிறகு வெயில் தலைகாட்டியது.

ஆனாலும், தொடா் மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் வடிவது, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. வடிகால் ஆறுகளில் காணப்படும் ஆகாயத் தாமரைச் செடிகளால் வெள்ளம் வேகமாக வடிவதில் தடை ஏற்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் நெற்பயிா்களை மூழ்கடித்த மழைநீா் விரைவாக வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி, டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நெற்பயிா்கள் முழுவதும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.