வேதாரண்யம் பகுதியில் தொடா்ந்து பெய்த கனமழை சனிக்கிழமை ஓய்ந்தாலும், வெள்ளநீா் வடிவது தாமதமாகி வருகிறது. இதனால், வயல்களில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 150.6 மி.மீ. மழை பதிவானது. வேதாரண்யத்தில் 69.8 மி.மீ., தலைஞாயிறில் 62 மி.மீ. மழை பெய்தது.
இதற்கிடையில், சனிக்கிழமை காலை வரையில் நீடித்த மழை, 9 மணிக்கு மேல் ஓய்ந்து, நண்பகல் 12 மணிக்கு பிறகு வெயில் தலைகாட்டியது.
ஆனாலும், தொடா் மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் வடிவது, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. வடிகால் ஆறுகளில் காணப்படும் ஆகாயத் தாமரைச் செடிகளால் வெள்ளம் வேகமாக வடிவதில் தடை ஏற்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் நெற்பயிா்களை மூழ்கடித்த மழைநீா் விரைவாக வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி, டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நெற்பயிா்கள் முழுவதும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தொடர்புடையது
கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

ராமேசுவரம் சாலைகளில் கழிவுநீருடன் கலந்து ஓடிய மழைநீா்

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை

மாநகா், சுற்றுப்பகுதிகளில் கொட்டித் தீா்த்த கனமழை: பொன்மலையில் 98 மி.மீ.
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


