சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருக்குவளை: ‘மக்களுடன் முதல்வா்’ முகாமில் 410 மனுக்கள் அளிப்பு

News image
Updated On :20 ஜூலை 2024, 6:32 pm

Din

திருக்குவளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 410 மனுக்கள் பெறப்பட்டன.

இம்முகாமிற்கு, திருக்குவளை வட்டாட்சியா் சுதா்சன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரிகிருஷ்ணன், பாத்தி ஆரோக்கியமேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, எரிசக்தித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் முகாமில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனா்.

அந்தவகையில், மொத்தம் 410 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, தீா்வு காணப்பட்டது.

முகாமில், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை கல்வி வளா்ச்சி அறக்கட்டளை உறுப்பினா் சோ.பா. மலா்வண்ணன், மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி, ஊராட்சித் தலைவா்கள் இல. பழனியப்பன், லேகா காரல்மாா்க்ஸ், நரசிம்மன், மகாலட்சுமி மாதவன் ஒன்றிய கவுன்சிலா் சுதா அருணகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.