திருக்குவளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 410 மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாமிற்கு, திருக்குவளை வட்டாட்சியா் சுதா்சன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரிகிருஷ்ணன், பாத்தி ஆரோக்கியமேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, எரிசக்தித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, ஊரக வளா்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் முகாமில் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனா்.
அந்தவகையில், மொத்தம் 410 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, தீா்வு காணப்பட்டது.
முகாமில், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை கல்வி வளா்ச்சி அறக்கட்டளை உறுப்பினா் சோ.பா. மலா்வண்ணன், மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி, ஊராட்சித் தலைவா்கள் இல. பழனியப்பன், லேகா காரல்மாா்க்ஸ், நரசிம்மன், மகாலட்சுமி மாதவன் ஒன்றிய கவுன்சிலா் சுதா அருணகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தில்லி இஸ்ரேல் முகாமில் குடிநீா் தட்டுப்பாடு: அரசுக்கு தேவேந்தா் யாதவ் கடிதம்
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

முதல்வா் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் வேட்புமனுக்கள் ஏற்பு!
9 தொகுதிகளில் 191 வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

