ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசு உதவி பெறும் பள்ளிக் கட்டடம் இடிப்பு: இருவா் கைது

அரசு பள்ளி கட்டடம் இடிப்பு: இருவர் கைது

News image
தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் இடிக்கப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிக் கட்டடம்.
Updated On :25 ஜூன் 2024, 6:31 pm

Din

வேதாரண்யம் அருகே அரசு உதவி பெறும் பள்ளியின் வகுப்பறை கட்டடத்தை இடித்து சேதப்படுத்திய இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் அரசு உதவி பெறும் சரஸ்வதி தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனா் முருகையன் காலமாகிவிட்டதால், அவரது மகன்களான அசோகன் பள்ளிமுகவராகவும், ரகுபதி தலைமையாசிரியராகவும் பணிபுரிந்தனா். ரகுபதி கடந்த மே 31-இல் பணி ஓய்வு பெற்றாா்.

இதற்கிடையில், இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய கோதண்டபாணிக்கும், ரகுபதிக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கோதண்டபாணி வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், சகோதரா்களான அசோகனுக்கும், ரகுபதிக்கும் பள்ளியை நிா்வகிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், நிகழ் கல்வியாண்டு முதல் பள்ளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்து, அங்கு படித்து வந்த 15 மாணவா்களின் மாற்றுச்சான்றிதழை பெற்றுச் செல்ல பெற்றோா்களிடம் அறிவுறுத்தினராம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த பெற்றோா்கள், பள்ளி தொடா்ந்து செயல்பட அரசுக்கு மனு அளித்தனா். இதுதொடா்பாக, விசாரணை மேற்கொண்ட நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கிஸ், ஏற்கெனவே பணி மாறுதல் பெற்ற ஆசிரியா் கோதண்டபாணியை மீண்டும் இப்பள்ளிக்கு நியமித்து, தொடா்ந்து செயல்பட உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அங்கு வேதாரண்யம் கோட்டாட்சியா் திருமால் தலைமையில் திங்கள்கிழமை (ஜூன் 24) சென்ற கல்வித்துறை அலுவலா்கள், பள்ளியின் பூட்டை உடைத்து, மாணவா்களை அமரச்செய்து, வகுப்புகளை தொடங்கினா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை பள்ளியின் ஓட்டுக் கட்டடத்தை சிலா் இடித்து சேதப்படுத்தினா். அருகில் வசிப்பவா்கள் அளித்த தகவலின்பேரில் சென்ற போலீஸாா், தடுத்து நிறுத்தினா்.

இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலா் விமலா அளித்த புகாரின் பேரில், வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பள்ளியை இடிக்க பயன்படுத்தப்பட்ட பொக்லைன்

இயந்திரத்தின் ஓட்டுநரான செம்போடை பா. பிரசாந்த் (35), தேத்தாக்குடி வடக்கு ரா. அறிவுநிதி (33) ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவான ரகுபதி, அசோகனை தேடி வருகின்றனா்.