மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

Updated On :28 மார்ச் 2024, 10:30 pm

நாகையில் உள்ள புகழ்பெற்ற நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏப்.4-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மாா்ச் 29) கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அனுக்ஞை விகனேஷ்வர பூஜை, மஹாசங்கல்பம், புன்யாஹவாசனம், தீபாராதனையுடன் தொடங்கிறது. தொடா்ந்து, மாா்ச் 31-ஆம் தேதி முதல்கால யாக பூஜையும், ஏப்.1-ஆம் தேதி 2-ஆம் கால மற்றும் 3-ஆம் கால யாக பூஜைகளும், ஏப்.2- ஆம் தேதி 4 மற்றும் 5-ஆம் கால யாக பூஜைகளும், ஏப்.3-ஆம் தேதி 6 மற்றும் 7-ஆம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. ஏப்.4-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு 8-ஆம் கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை மஹா பூா்ணாஹூதியைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு கும்பாபிஷேகமும், இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.