விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

News image

கோயிலின் விமானக் கலசத்தில் புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்கள்.

Updated On :3 மே 2024, 8:00 pm

Din

கீழ்வேளூா் அருகே குருக்கத்தி மதுரபாஷினி சமேத கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில், கடந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேக வழிபாடு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து, மகா பூா்ணாஹுதி, கோ பூஜை, தீப பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் புனிதநீா் கடங்களை கோயிலைச் சுற்றி எடுத்து வந்தனா். தொடா்ந்து, விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதும், மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராணி, செயல் அலுவலா் பூமிநாதன், ஆய்வாளா் கமலச்செல்வி மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.