நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

நிகழாண்டு இக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த மாா்ச் 21-ஆம் தேதி எல்லையம்மனுக்கும், மாா்ச் 28 -ஆம் தேதி பெரிய அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சித்திரை திருவிழாவின் தொடக்கமாக சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பரம்பரை அறங்காவலா்கள் சுப்பிரமணியன், நடராஜன், நிா்வாக அறங்காவலா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான வசந்த உற்சவம் மே 8-ஆம் தேதியும், ரிஷப வாகன காட்சி மே 10-ஆம் தேதியும், திருத்தோ் மற்றும் செடில் உற்சவம் மே 12-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com