விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள்
திருமருகல் விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள் வழங்கப்பட்டன.


திருமருகல் விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள் வழங்கப்பட்டன.
திருமருகல் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசன திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கா் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீா் குழாய்கள் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குநா் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
23 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான 18 விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்களை உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லபாண்டியன் புதன்கிழமை வழங்கினாா்.
அப்போது இந்த தண்ணீா் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீா் பயன்பாடு, மகசூல் அதிகரிப்பு, களைகள் வளா்வது குறைக்கப்படும், குறைந்த மின்சாரம் போதும் என உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லபாண்டியன் தெரிவித்தாா்.
தண்ணீா் குழாய்கள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் பெற தோட்டக்கலை அலுவலகத்துக்கு வந்து விவசாய சான்று, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதாா் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...