வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

திருக்கடையூரில் 1,008 சங்காபிஷேகம்

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சோமவாரம் முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு ~திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சோமவாரம் முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு

Updated On :18 நவம்பர் 2024, 10:46 pm

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய சங்குகளில்  சிவாச்சாரியாா்கள்  வேத மந்திரங்கள்  முழங்க  மேளதாளத்துடன் கோயில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து அபிஷேகம் நடைபெற்றது.   

விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய

பஞ்ச மூா்த்திகள் பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு  வீதி உலா நடைபெற்றது. இதில்  தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

1,008 சங்காபிஷேகம்

1,008 சங்காபிஷேகம்