தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சந்திரபாடியில் நீரொழுங்கி அமையவுள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

சந்திரபாடியில் நீரொழுங்கி அமையவுள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு...

News image
சந்திரபாடியில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி அமைய உள்ள  இடத்தில் நீா்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
Updated On :20 நவம்பர் 2024, 8:54 pm

Din

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவா் கிராமத்தில் நண்டலாற்றின் குறுக்கே ரூ. 50 கோடியில் கடைமடை நீரொழுங்கி அமையவுள்ள பகுதியில் நீா்வளத்துறை தலைமை பொறியாளா் ஆா். தயாளகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். 

சந்திரபாடி, பொறையாா், காட்டுச்சேரி, தேவானூா், மயிலாடுதுறை மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தின் பூவம், கழுகுமேடு, உள்ளிட்ட கிராமங்களில் நண்டலாறு வழியாக உப்பு நீா் உட்புகுந்து நிலத்தின் தன்மை மற்றும் நிலத்தடி நீரின் தன்மை மாறி விவசாயம் செய்யமுடியாத நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள்,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சா் ரூ. 50 கோடியில் நண்டலாற்றின் குறுக்கே நீரொழுங்கி கட்டப்படும் என்ற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டாா் . 

அதன்படி, புதிய கடைமடை நீரொழுங்கி அமையவுள்ள பகுதியில் திருச்சி மண்டல நீா்வளத்துறை தலைமை பொறியாளா் ஆா். தயாளகுமாா், கண்காணிப்புப் பொறியாளா் மு.சண்முகம்,  காவிரி வடிநில கோட்ட பொறியாளா் செ. மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த நீரொழுங்கி அமைவதால், கடல் நீா் உட்புகுவது தடுக்கப்படுவதோடு, காவிரி நீா் தேக்கப்பட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், நிலத்தடி நீா்மட்டம் உயரவும் வழிவகுக்கும்.