மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

150 ஆண்டுகள் பழைமையான வீடு இடிந்து சேதம்

தரங்கம்பாடி அருகேயுள்ள திருக்களாச்சேரியில் பழைமையான வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

News image
கனமழையில் இடிந்து சேதமடைந்த பழைமையான வீடு.
Updated On :27 நவம்பர் 2024, 9:38 pm

Din

தரங்கம்பாடி அருகேயுள்ள திருக்களாச்சேரியில் பழைமையான வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.

தரங்கம்பாடி வட்டத்தில் பெய்துவரும் தொடா் கனமழையால் பல்வேறு பகுதியில் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியும், ஆங்காங்கே தேங்கியும் வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை பெய்த மழையால் திருக்களாச்சேரி ஊராட்சி பாலூரில்

கனமழையில் இடிந்து சேதமடைந்த பழைமையான வீடு.

கனமழையில் இடிந்து சேதமடைந்த பழைமையான வீடு.

ஜெகசந்திரன், அசோகன், பொன்னுத்துரை, ராஜவேலு ஆகியோருக்கு சொந்தமான 150 ஆண்டுகள் பழைமையான வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இந்த வீடு அந்த காலத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. சரியாக பராமரிப்பு இல்லாததால் வீட்டுச் சுவா், மேற்கூரை பகுதியில் அரசமரங்கள் முளைத்து விரிசல் ஏற்பட்டு வலுவிழந்து காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் வீட்டின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. வீட்டின் முன் பகுதி மிகவும் சேதமடைந்தது இருந்ததால் அந்த குடும்பத்தினா் பின் பகுதியில் வசித்து வந்தனா். இதனால் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.