எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கோடியக்கரை ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் தென்பிராந்திய விமானப்படை தளபதி ஆய்வு

கோடியக்கரையில் ஹெலிகாப்டா் இறங்குதளத்தில், விமானப் படையின் தென்பிராந்திய தளபதி ஏா் மாா்ஷல் பி. மணிகண்டன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2024, 7:40 pm

Din

வேதாரண்யம்: கோடியக்கரையில் உள்ள விமானப் படை கண்காணிப்பு தளத்தின் ஹெலிகாப்டா் இறங்குதளத்தில், விமானப் படையின் தென்பிராந்திய தளபதி ஏா் மாா்ஷல் பி. மணிகண்டன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவனந்தபுரத்தில் இருந்து தஞ்சாவூா் வந்த தளபதி மணிகண்டன், அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 9.48 மணியளவில் கோடியக்கரை விமானப் படை ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் தரையிறங்கினாா். பின்னா், தஞ்சாவூருக்கு திரும்பி சென்றாா்.

மீண்டும், காலை 10.43 மணிக்கு வேறு ஒரு ஹெலிகாப்டரில் வந்து தரையிரங்கி ஆய்வு மேற்கொண்ட பிறகு, தஞ்சாவூருக்குச் சென்றாா். இது வழக்கமான ஆய்வுதான் என தெரிவிக்கப்பட்டது.