உத்தரப் பிரதேசத்தில் இந்திய விமானப் படையின் விமானம் புதன்கிழமை விபத்துக்குள்ளானது.
விமானத்தை இயக்கிய இரண்டு விமானப் படை அதிகாரிகளும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய விமானப் படை முதல்கட்டத் தகவலை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பம்ரெளலி விமானப் படைத் தளத்துக்குச் சொந்தமான பறவைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் விமானம் இன்று பகல் 12.30 மணியளவில் பிரயாக்ராஜ் அருகே விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளாகும் போது அவசர பாராசூட் உதவியுடன் இரண்டு விமானப் படையின் அதிகாரிகளும் வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தை பம்ரௌலி விமானப்படைத் தளத்தின் தலைமை இயக்க அதிகாரியான குரூப் கேப்டன் பிரவீன் அகர்வால் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான குரூப் கேப்டன் சுனில் குமார் பாண்டே ஆகியோர் இயக்கியுள்ளனர். இவர்களில் குரூப் கேப்டன் பிரவீன் அகர்வால் ’வாயு சேனை’ விருது பெற்றவர்.
இரண்டு அதிகாரிகளும் பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி விங் கமாண்டர் தேபார்த்தோ தார் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், என்ஜின் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணைக்கு விமானப் படை உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary
Indian Air Force aircraft crashes near Prayagraj!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலி

சுகோய் போா் விமானம் மாயம்

லண்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலி

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...


