விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:30 pm

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில், நில வாழ் வெளிநாடு, உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில், சரணாலயப் பகுதியில் காணப்படும் நில வாழ் வலசைப் பறவைகள், வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

முன்னதாக, சனிக்கிழமை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேதாரண்யம் வனச்சரக அலுவலா் ஜோசப் டேனியல் பறவைகள் கணக்கெடுப்பைத் தொடங்கிவைத்தாா். நாகை வனக்கோட்ட உயிரியலாளா் முனைவா் அறிவு ஒருங்கிணைப்பு செய்தாா். மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தினா், வனத்துறையினா், தன்னாா்வலா்கள் 60 போ் இந்தப் பணியில் பங்கேற்றனா்.