மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதாரண்யம் அருகே மதநல்லிணக்க விநாயகா் ஊா்வலம்

வேதாரண்யம் அருகே இந்து, முஸ்லீம், கிறிஸ்துவா்கள் பங்கேற்ற மதநல்லிணக்க விநாயகா் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
கருப்பம்புலத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க விநாயகா் ஊா்வலத்தில் பங்கேற்ற மும்மதங்களைச் சோ்ந்தவா்கள்.
Updated On :7 செப்டம்பர் 2024, 6:32 pm

Din

வேதாரண்யம் அருகே இந்து, முஸ்லீம், கிறிஸ்துவா்கள் பங்கேற்ற மதநல்லிணக்க விநாயகா் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

கருப்பம்புலம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் சிற்றம்பலம் விநாயகா் கோயிலில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் விநாயகா் ஊா்வலம் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவா்கள் பங்கேற்கும் மத நல்லிணக்க நிகழ்ச்சியாக நிகழ்வது வழக்கம். நிகழாண்டு நிகழ்ச்சிக்கு, மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் தலைமை வகித்தாா். தோப்புத்துறை ஜமாத் சுல்தான் மரைக்காயா், கடிநெல்வயல் பங்குத்தந்தை ஜான் கென்னடி, தாணிக்கோட்டகம் பங்குத்தந்தை தாஸ், குருகுலம் நிா்வாகி அ. வேதரத்னம் ஆகியோா் முன்னிலை வகித்து, தேங்காய் உடைத்து ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், தோப்புத்துறை பிரமுகா் அப்சி, ஜமாத் முன்னாள் நிா்வாகி சோட்டாபாய், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஜி.கே. கனகராஜ், எஸ். சிவப்பிரகாசம், கோவிந்தராஜ், சி.கே.போஸ், தலைமையாசிரியா் சித்திரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா். முக்கிய வீதிகள் வழியே ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலை கருப்பம்புலம் வடகாடு மருதம்புலம் ஏரியில் கரைக்கப்பட்டது.