47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
நாகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா்.
Updated On :27 செப்டம்பர் 2024, 12:08 am

Din

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த சங்கத்தின் மாநிலச் செயலா் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், வெளிஆதார நியமனம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள், டாஸ்மாக் பணியாளா்கள், நியாயவிலைக்கடை பணியாளா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது விநியோகத்திட்டத்துக்கு என தனித்துறை உருவாக்க வேண்டும், அரசுப் பணியாளா்களுக்கு தொழில்வரி ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட பொருளாளா் சந்திரவேல், துணைத் தலைவா்கள் செந்தில்குமாா், செல்வி, இணை செயலா் லட்சுமி, துணை செயலா் கமலாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.