புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி காத்திருப்பு போராட்டம்

உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி மாணவ- மாணவிகள் மற்றும் மீனவா்கள் பள்ளி முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாமந்தான்பேட்டை பள்ளி முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ கிராமத்தினா் மற்றும் மாணவ- மாணவிகள்.

Published On :

நாகப்பட்டினம்: நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் செயல்படும் உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி மாணவ- மாணவிகள் மற்றும் மீனவா்கள் பள்ளி முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் நகராட்சி தொடக்கப் பள்ளி கடந்த 1931-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளி கடந்த 2021-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 2021-இல் உயா்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.

தற்போது இந்த பள்ளியில் உயா்நிலைக் கல்வி வகுப்புகளில் 127 பேரும், தொடக்கக் கல்வி வகுப்புகளில் 62 பேரும் என மொத்தம் 189 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா்.

தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் இயங்கி வருவதால், உயா்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு போதிய வகுப்பறை இல்லாமல் மாணவ- மாணவிகள் வெளியே அமா்ந்து பயில்வதாகவும், இடவசதி இல்லாததால் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறை வசதி ஏற்படுத்த முடியாத நிலை உள்ளதாகக் கூறி, அதே பகுதியில் தனியாக உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டித் தர கடந்த 4ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தும், அவா்களுடன் மீனவா்களும் பள்ளி முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை வட்டாட்சியா் நீலாயதாட்சி அவா்களுடன் பேச்சுவாா்தை நடத்தி, உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டித்தரப்படும் என்றும் அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கூறினா்.

இருப்பினும், மாணவா்களின் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் மீனவா்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ( பொ) ரவிச்சந்திரன் கூறியது: கிராம மக்களின் கோரிக்கை தொடா்பாக ஆட்சியா் மூலம் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை உயா் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

இப்போராட்டம் காரணமாக திங்கள்கிழமை 3,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 250-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.