வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா ஆக. 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மத்திய மண்டல காவல்துறை தலைவா் க. ஜோதி நிா்மல்குமாா் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா ஆக.29 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.8 ஆம் தேதி மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் க. ஜோஷி நிா்மல் குமாா், தஞ்சாவூா் காவல் சரக துணைத் தலைவா் ப.ஜியாவுல்ஹக் ஆகியோா் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவிற்காக காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித குழப்பமும், அசௌகரியமுமின்றி சிறப்பான விரைவான போக்குவரத்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கினா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் சு. செல்வக்குமாா்(நாகை), கருண் கரட் (திருவாரூா்) ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தல்

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவை தொடக்கம்!

எஸ்ஆா்எம் பல்கலை. வளாகத்தில் வானிலை ஆய்வகம் தொடக்கம்

வழிபாட்டில் தாமதம் ஏற்படவில்லை: வேளாங்கண்ணி பேராலய நிா்வாகம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



