திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மத்திய மண்டல ஐஜி ஆய்வு

News image

வேளாங்கண்ணியில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு மேற்கொண்ட மத்திய மண்டல காவல்துறை தலைவா் க. ஜோதி நிா்மல்குமாா், தஞ்சை காவல் சரக துணைத் தலைவா் ப. ஜியாவுல்ஹக் உள்ளிட்டோா்.

Updated On :24 ஆகஸ்ட் 2025, 12:30 am IST

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா ஆக. 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மத்திய மண்டல காவல்துறை தலைவா் க. ஜோதி நிா்மல்குமாா் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா ஆக.29 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.8 ஆம் தேதி மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் க. ஜோஷி நிா்மல் குமாா், தஞ்சாவூா் காவல் சரக துணைத் தலைவா் ப.ஜியாவுல்ஹக் ஆகியோா் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவிற்காக காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித குழப்பமும், அசௌகரியமுமின்றி சிறப்பான விரைவான போக்குவரத்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கினா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் சு. செல்வக்குமாா்(நாகை), கருண் கரட் (திருவாரூா்) ஆகியோா் உடனிருந்தனா்.