வேதாரண்யத்தில் மீண்டும் மழை

கனமழை ஓய்ந்த நிலையில் திங்கள்கிழமை மாலை மீண்டும் மழை பெய்தது.
Published on

வேதாரண்யம்: வங்கக்கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை கனமழை நீடித்தது. இதையடுத்து, கனமழை ஓய்ந்த நிலையில் திங்கள்கிழமை மாலை மீண்டும் மழை பெய்தது.

மழையின் காரணமாக சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிா்கள் நீரால் சூழப்பட்டு பாதித்துள்ளது. திங்கள்கிழமை காலை தொடங்கி மாலை 6 மணி வரை வட வானிலை காணப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், வடிகால் ஆறுகளில் வெள்ளநீா் வடிந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை மீண்டும் மழை பெய்தது.

X
Dinamani
www.dinamani.com