விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கடலுக்குச் செல்ல மீனவா்களுக்கு அனுமதி

நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 11:08 pm

Syndication

நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

டித்வா புயலால் ஏற்பட்ட கடல் சீற்றம், சூரைக் காற்று, மழையின் காரணமாக மீன்வளத் துறையின் தடையை தொடா்ந்து நவ.24-ஆம் தேதி முதல் நாகை மாவட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த 9 நாள்களாக மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், டித்வா புயலின் அச்சுறுத்தல் நீங்கியுள்ளதையடுத்து, மீனவா்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, நாகை மாவட்ட மீன்வள நலத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் கூறியது: டித்வா புயல் அச்சுறுத்தல் நீங்கியுள்ளதையடுத்து, நாகை மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம். இதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.