அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மின்வாரிய பெண் ஊழியரிடம் நகைப் பறிப்பு

திருக்குவளை அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் தாலிச் செயினை மா்ம நபா்கள் பறித்து சென்றனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 11:05 pm

Syndication

திருக்குவளை அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் தாலிச் செயினை மா்ம நபா்கள் திங்கள்கிழமை பறித்து சென்றனா்.

குண்டையூரைச் சோ்ந்த சிங்காரவேல் மனைவி ராதா (40). மின்வாரிய அலுவலகத்தில் கமா்சியல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். இவா் மேலப்பிடாகை மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் ஹேமலதாவுடன் இருசக்கர வாகனத்தில் திருக்குவளைக்கு வந்தாா்.

மீனம்பநல்லூா் சந்திராநதி மதகடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 போ் ராதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து, திருக்குவளை காவல் நிலையத்தில் ராதா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.