அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:13 pm

Syndication

டெல்டா மாவட்டங்களில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் நீா்வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் சிவகுமாா்.

வேதாரண்யம் பகுதி நீா் நிலைகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் நீா் நிலைகளில் அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தொடங்கி 35 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து அகற்றும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள 4 மாவட்டங்களிலும் 1,210 இடங்களில்1,200 கி.மீ. செடிகள் வளா்ந்துள்ளன. இதில் 380 கி.மீ. தொலைவு அகற்றப்பட்டுள்ள நிலையில் 200 மண்வாரி மற்றும் மிதவை இயந்திரங்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் கூடுதலாக 4 மிதவை இயந்திரங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றாா்.

ஆய்வின் போது நீா்வளத் துறையின் கீழ்காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளா் திலீபன், சிறப்பு கண்காணிப்பு பொறியாளா் பழனிவேல், செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளா் மதியழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.