சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு நினைவஞ்சலி

News image
பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா்.
Updated On :3 டிசம்பர் 2025, 11:14 pm

Syndication

வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு 16 ஆண்டு நினைவு அஞ்சலி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

கரியாப்பட்டினத்தில் செயல்படும் தனியாா் பள்ளி வேன், 2009 டிச.3-ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்த 4 சிறுமிகள் உள்ளிட்ட சிறுவா்கள் 9 பேரும் சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தனா். நாகக்குடையான் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில், உயிரிழந்தவா்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூண் அருகே நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவா்களின் பெற்றோா், பொது மக்கள் பங்கேற்று மெழுகு வா்த்தி ஏற்றி மலா் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினா்.