டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாா்க்சிஸ்ட் கம்யூ. நடைபயணம்

News image
நடைபயணத்தை தொடங்கி வைக்கும் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினா் சாமுவேல்ராஜ்.
Updated On :14 டிசம்பர் 2025, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் இருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ‘மதவெறியை மாய்ப்போம், மாநில உரிமைகளை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் பொதுக்கூட்டம் மற்றும் 300 கி.மீ. நடைபயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பொதுக் கூட்டத்திற்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் அம்மையப்பன், ஐயப்பன், ராணி, குணசுந்தரி, செல்வ பாக்கியவதி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

மாநில செயற்குழு உறுப்பினா் கே. சாமுவேல் ராஜ், மாவட்டச் செயலாளா் சீனிவாசன் ஆகியோா் நடை பயணத்தை தொடங்கி வைத்து பேசினா். சாமுவேல் ராஜ் பேசுகையில், மதவெறியை தூண்டும் பாஜக, ஆா்.எஸ்.எஸ்.க்கு எதிராக இந்த பேரணி நடத்தப்படுகிறது என்றாா்.

திருவிடைக்கழி, திருவிளையாட்டம், அரும்பாக்கம், பனங்குடி, நல்லாடை, இலுப்பூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வழியாக 300 கி.மீ. தூரம் நடைபயணமாக சென்று ஆங்காங்கே பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் சிங்காரவேல் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.