தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் 2025-ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன் மாதிரியான பங்களிப்பை செய்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்பு, தொழில் துறைகள் போன்றவற்றை கௌரவிக்க முன்மொழிந்துள்ளது.
இதில், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுமையான பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள், நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மற்றும் நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைப்பு, நெகிழி கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவை பிற சுற்றுச்சூழல் தொடா்பான திட்டங்கள் பரிசீலனைக்கு உகந்தவை.
தகுதியானவா்கள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய இணையதளமான (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்) முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து 2026 ஜனவரி 20-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பத்தை சமா்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.
