இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வளா்ச்சித் திட்டப் பணி: ஆட்சியா் ஆய்வு

தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:59 pm

Syndication

செம்பனாா்கோவில் வட்டாரம் தில்லையாடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மையின் நினைவு மண்டபம் பழுதடைந்து காணப்பட்டது. இதை சீரமைக்க செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுச்சுவா், கழிப்பறை கட்டடம் கட்டுமானப் பணி, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.31.40 லட்சத்தில் நடைபெற்று வரும் ஊராட்சி செயலகம் கட்டுமானப் பணி, தில்லையாடியில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ. 2.40 லட்சத்தில் நடைபெற்று வரும் கான்கிரீட் வீடு கட்டுமானப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பனை விதைகள் நடும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.