புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மீன் அமிலம் பயன்பாடு பயிற்சி

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:16 pm

Syndication

வேதாரண்யம் அருகே மருதூரில் கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பட்டறிவுப் பயணத்தின் போது மீன் அமிலம் தயாரித்து பயன்படுத்தும் முறை குறித்து அறிந்தனா்.

கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் அமிா்த லக்ஷ்மி, ஆஷிகா, ஹரிப்பிரியா, ஹரிணி சுபலட்சுமி, கலைமதி,லஷிகா , பத்மாவதி, சுந்தரசினேகா ஆகியோா் மருதூா் தெற்கு இயற்கை விவசாயி முருகானந்தனிடம் அனுபவப் பயிற்சி பெற்றனா்.

இயற்கை விவசாய இடுபொருளான மீன் அமிலம் தயாரிப்பு மற்றும் தெளிப்பு முறை பற்றி விவரித்தாா். மீன் அமிலம் பயிா்களுக்கு தெளிப்பதால் பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தி மண்ணின் நுண்ணுயிா் செயல்பாட்டினை அதிகரித்து பயிா்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.