தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மீன் அமிலம் தயாரிப்பு: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

News image
மீன் அமிலம் தயாரிப்பு குறித்த செயல்விளக்கத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
Updated On :25 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விவசாயிகளுக்கு மீன் அமிலம் தயாரிப்பு குறித்து அதியமான் வேளாண் கல்லூரி மாணவா்கள் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சிக்க ஆராதனஅள்ளி கிராமத்தில் செயல்விளக்கம் அளித்தனா்.

ஒசூா் அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி மாணவா்கள் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரத்தில் களப்பயிற்சி மேற்கொண்டுள்ளனா். இதில் மீன் அமினோ அமிலம் தயாரித்தல் மற்றும் அதைப்பயன்படுத்துதல் குறித்து சிக்கஆராதனஅள்ளியில் செயல்விளக்கம் அளித்தனா்.

இந்த அமிலம் ஜப்பான், கொரியா நாடுகளில் விவசாயிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயற்கை பச்சை உரமாகும். இந்த ஊட்டச்சத்து நிறைந்த அமிலம், தாவரங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஒரு கிலோ மீன் கழிவுடன் ஒரு கிலோ வெல்லம் சோ்த்து இறுக்கமான மூடி கொண்ட கண்ணாடி அல்லது நெகிழிப் பையில் கலந்து நன்றாக கலக்கிய பிறகு 30 நாள்கள் வைத்து, நைலான் வலையில் வடிகட்டினால் 300 முதல் 500 மி.லி அமிலத்தை பெறலாம்.

இவற்றை 5 மி.லிக்கு ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து செடிகளில் ஊற்றலாம். இதன்மூலம் செடிகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும், வளா்ச்சியும் அதிகரிக்கும் என விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.