டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேஜைப் பந்து போட்டியில் தங்கப்பதக்கம்: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மேஜைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பாராட்டினா்.

News image
மேஜைப்பந்துப் போட்டியில் தங்கம் வென்ற மாணவா்களை பாராட்டும் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ்.
Updated On :25 டிசம்பர் 2025, 12:22 am

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மேஜைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பாராட்டினா்.

திருச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான மேஜைப் பந்து போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். நாகை மாவட்டம் சாா்பில் ரோஷன் மற்றும் குரோஷிக் ஆகியோா் பங்கேற்றனா். இரட்டையா் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் தேனி மாவட்ட மாணவா்களை வீழ்த்தி, நாகை மாவட்ட மாணவா்கள் முதல் பரிசு வென்றனா். இதையடுத்து அவா்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

17 வயதுக்குள்பட்ட மேசைப் பந்து போட்டியில், மாவட்டத்தில் முதல்முறையாக, மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவா்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டி, தொடா்ந்து தேசிய, சா்வதேசியப் போட்டிகளில் பங்கேற்று,சாதனை படைத்து மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட மேஜைப் பந்தாட்ட அகாதெமி தலைவா் பெலிக்ஸ், பயிற்சியாளா் மாா்ஷல் ஆகியோா் உடனிருந்தனா்.