அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாகூா் தா்கா கந்தூரி விழா ஆய்வுக் கூட்டம்: அமைச்சா்கள் பங்கேற்பு

நாகூா் தா்காவின் 469-ஆவது கந்தூரி சந்தனக்கூடு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:59 pm

Syndication

நாகை அருகேயுள்ள உலகப் புகழ் பெற்ற நாகூா் தா்காவின் 469-ஆவது கந்தூரி சந்தனக்கூடு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா், பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பங்கேற்றனா். கூட்டத்தில், ஊா்வலம் செல்லும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நாகை முதல் நாகூா் வரை உள்ள குப்பைகளை அகற்றி, ப்ளீச்சிங் பவுடா் தினசரி தெளிக்க சுழற்சி முறையில் சுமாா் 100 தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் வசதிக்காக ஆங்காங்கே 30 தற்காலிக கழிப்பறைகள் அமைக்க வேண்டும். பக்தா்கள் அதிகம் கூடும் 10 இடங்களில் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும். 3 இடங்களில் வாகனங்களை நிறுத்த வசதி செய்ய வேண்டும். ஊா்வலம் நடைபெறும் வழித்தடங்களில் சாலையில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும். மாவட்ட காவல் துறை சாா்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கந்தூரி கொடி ஊா்வலம் நடைபெறும் நாளான நவ.21 முதல் 22-ஆம் தேதி அதிகாலை வரை மற்றும் சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெறும் நவ.30-ஆம் தேதி இரவு முதல் டிச.1- ஆம் தேதி அதிகாலை வரை வாகனங்கள் புத்தூா் சாலை வழியாக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யவேண்டும். கந்தூரி விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், நாகை எம்.பி. வை. செல்வராஜ், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா், நாகை நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து மற்றும் தா்கா நிா்வாகிகள் பங்கேற்றனா்.