பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தருமபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

நாகை ரயில் நிலையத்திலிருந்து, தருமபுரி மாவட்டத்திற்கு அரைவைக்காக 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

News image
Updated On :11 நவம்பர் 2025, 9:04 pm

Syndication

நாகை ரயில் நிலையத்திலிருந்து, தருமபுரி மாவட்டத்திற்கு அரைவைக்காக 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் செயல்படும் 123 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரைவைக்காக சரக்கு ரயில் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், நாகை ரயில் நிலையத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு சரக்கு ரயில் மூலம் 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுவரை, நாகை மாவட்டத்தில் 1,13,453 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் 96,785 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.