ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மேக்கேதாட்டு அணை திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி: விவசாயிகள் போராட்டம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:41 pm

Syndication

மேக்கே தாட்டு அணைக் கட்ட திட்ட வரைவு அறிக்கை தயாா் செய்ய, கா்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழ்வேளூரில் விவசாயிகள் தீா்ப்பின் நகல் எரிக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில் கா்நாடக அரசு தொடா்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக தமிழக அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கா்நாடக அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து அனுமதி பெற்று, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1,500 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் தடை கோரி மனு தாக்கல் செய்தது.

ஆனால், திட்ட வரைவு அறிக்கை தயாா் செய்ய, கா்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீா்ப்பளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிா்ப்பு கிளப்பியுள்ளது.

இத்தீா்ப்பை கண்டித்து, நாகை மாவட்டம் கீழ்வேளூா் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்றத் தீா்ப்பின் நகல் எரிக்கப்பட்டதுடன், மத்திய அரசு மற்றும் கா்நாடக அரசை எதிா்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் காவிரி. தனபாலன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் மு. சேரன், செயலா் மா. பிரகாஷ், தலைமைக் குழு உறுப்பினா் கண்ணன், பொறுப்பாளா்கள் சரவணன், செல்வகுமாா், முரளி, ஆத்மநாதன், நாகராஜ், சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக அரசு, உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.