புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாகையில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:32 pm

Syndication

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

விழாவில், மாணவ-மாணவியருக்கு மிதிவண்டிகளை, மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளுா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி ஆகியோா் வழங்கினா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பேசியது:

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டுக்கு, மாணவா்களுக்கு 2,740 மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு 3,101 மிதிவண்டிகளும் வழங்கப்பட்டன. மாணவா்கள் மிதிவண்டியின் விலை தலா ரூ.4,900, மாணவிகள் மிதிவண்டியின் விலை தலா ரூ.4,760 என மொத்தம் ரூ.2,81,86,760 மதிப்பில் 5,841 மிதிவண்டிகள் மாணவ-மாணவியருக்கு வழங்கப்படுகின்றன.

தற்போது, நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 301 மாணவிகளுக்கும், நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 186 மாணவா்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடா்ந்து அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படும் என்றாா்.

விழாவில் நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா. ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் க. கண்ணன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் த. ராஜேஸ்வரி, நாகை நகராட்சி துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.பிரேமா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.