எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நாகை மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

நாகை மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

News image
Updated On :15 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

தெற்கு தமிழக கடற்கரை, மன்னாா் வளைகுடா அதையொட்டிய பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் கோ. ஜெயராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு தமிழக கடற்கரையிலும், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் சனிக்கிழமை முதல் நவ. 17- ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 35 - 45 கி.மீ. முதல் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளாா்.