ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

Updated On :16 நவம்பர் 2025, 6:53 pm

திருமருகல் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
அம்பல் ஊராட்சி பொறக்குடி குணா் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் மகன் இளங்கேஸ்வரன் (17) . இவா் பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை அரசலாற்றில் தூண்டிலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தூண்டில் முள் மாட்டிக் கொண்டதை எடுக்க ஆற்றில் இறங்கியவா் நீரில் மூழ்கி மாயமானாா்.
தகவலறிந்த திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலா் திலக் பாபு தலைமையில் திருமருகல், நாகை தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினா் தேடி இளங்கேஸ்வரனை சடலமாக மீட்டனா். இதுகுறித்து, திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...