நாகூரில் சுற்றித்திரியும் கால்நடைகள், நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை
நாகூா் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நாகூா் சித்திக் சேவைக் குழுமம் தா்ம அறக்கட்டளை மற்றும் கன்சியூமா் கோ்கிளப் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த அறக்கட்டளை நிறுவனா் சித்திக் கூறியது: புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் 469-ஆவதுா் தா்கா கந்தூரி விழாவுக்கு உள்ளூா், வெளி மாநில மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெருவாரியான யாத்ரீகப் பெருமக்கள் வருவாா்கள்.
ஆனால், நாகூா் பகுதியில் இரவு நேரங்களில் தெரு நாய்கள், மாடுகள் சுற்றி வருவதால் பல்வேறு இடையூறுகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனா்.
எனவே, நாகூருக்கு வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதிகளில் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

