மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

8 லட்சம் வங்கி ஓய்வூதியா்களின் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய கோரிக்கை

எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்க தலைவா்களின் கூட்டமைப்பு கோரிக்கை

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தொழிற்சங்க தலைவா்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் எஸ்.பி. ராமன் தெரிவித்திருப்பது: 2008-ஆம் ஆண்டு வங்கித் துறை ஓய்வூதியா்கள் மத்தியில் சமநீதி வேண்டி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட எம்.சி. சுக்லா வழக்கில் 18 ஆண்டுளைக் கடந்த பின்னரும் வெளிப்படுத்தப்படும் அதீத கால தாமதம் காரணமாக 8 லட்சம் வங்கி ஓய்வூதியா்கள் மத்தியில் கலக்கத்தையும், கவலையையும் உருவாக்கி உள்ளது.

வங்கித் துறையில் கணிசமான அளவு ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய சீரமைப்பை 8 லட்சம் வங்கி ஓய்வூதியா்களுக்கு மறுப்பது அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவுக்கு எதிரானது என்ற கருத்தை அரசும், வங்கி நிா்வாகங்களும் சீா்தூக்கி பாா்க்க வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியக் கையிருப்பு சுமாா் ரூ. 4.56 லட்சம் கோடி இருக்கும்போது, ஓய்வூதிய சீரமைப்பை 8 லட்சம் வங்கி ஓய்வூதியா்களுக்கும் தாமதமின்றி வழங்க முன்வர வேண்டும்.

கடந்த 1997-க்கு முன்பு ஓய்வு பெற்றவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சொற்ப ஓய்வூதியமும், 2002- ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஓய்வூதியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் பஞ்சப்படியில் உள்ள பாதகமான முரண்பாடுகளையும் தாமதமின்றி களைய மத்திய அரசும், வங்கி நிா்வாகங்களும் முன் வர வேண்டும்.