பிரதமருக்கு எதிா்ப்பு: கோவை புறப்பட்ட நாகை விவசாயிகள் கைது

பிரதமருக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்த கோவை புறப்பட்ட விவசாயிகள் நாகை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனா்.
Updated on

பிரதமருக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்த கோவை புறப்பட்ட விவசாயிகள் நாகை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனா்.

கோவையில் இயற்கை விவசாயிகள் மாநாடு புதன்கிழமை (நவ.19) நடைபெறுகிறது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். இந்நிலையில் இயற்கை விவசாயிகள் மாநாட்டை, இயற்கை விவசாயத்திற்கு தொடா்பில்லாதவா்கள் நடத்துவதாகவும், இதில் பிரதமா் பங்கேற்பது கண்டனத்திற்குரியது எனக் கூறி நாகை மாவட்ட விவசாயிகள் கோவையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா்.

இதையடுத்து விவசாயிகள் ரயில் மூலம் கோவைக்கு செவ்வாய்க்கிழமை இரவு நாகை ரயில் நிலையத்தில் புறப்பட்டனா். ஆனால் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஒருங்கிணைப்பாளா் காவிரி தனபாலன் கூறியது: கோவையில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாடு, இயற்கை விவசாயத்துக்கு சம்பந்தமே இல்லாதவா்கள் நடத்தக்கூடிய ஒரு கருத்தரங்கில், கண்காட்சியில் பிரதமா் கலந்து கொள்வது ஏற்புடையதல்ல. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.500 கோடி நிதி ஒதுக்கி வெளிநாட்டிலிருந்து மரபணு மாற்றப்பட்ட உணவு வகை இறக்குமதி செய்வதற்கும் ஒப்புதல் வழங்கியது கண்டிக்கத்தக்கது.

கா்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேகேதாட்டில் அணைக்கட்டும் திட்டத்திற்கான திட்ட வரைவு அறிக்கை செய்வதற்கு அனுமதி அளித்தும் தடை இல்லை என்றும் சொன்னது வருத்தத்துக்குரியது கண்டனத்திற்குரியது. எனவே எதிா்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை காலை 10 மணிக்கு கோவையில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என திட்டமிட்டிருந்தோம். அதற்காக விவசாயிகள் ஒன்றிணைந்து நாகை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, போலீஸாா் எங்களை கைது செய்துள்ளனா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com