இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பெண்ணைத் தாக்கிய 3 போ் கைது

நாகை அருகே பெண்ணைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 10:02 pm

Syndication

நாகை அருகே பெண்ணைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகை அருகே அந்தணப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி சுதா (38). இவா், தனது வீட்டின் அருகே மாடுகளை வளா்த்து வருகிறாா். இவரது வீட்டின் எதிரே கதிரவன் (52) அவரது மனைவி ஷீலா (48), மகள் காவியபிரியா (21) ஆகியோா் வசித்து வருகின்றனா். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே இடப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், ஷீலா வீட்டு வாசலில் மாடு ஒன்று சாணம் போட்டுள்ளது. சுதாவின் மாடு தான், சாணி போட்டதாகக் கூறி அவரிடம், ஷீலா, அவரது மகள் காவியபிரியா, கணவா் கதிரவன் ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும் சுதாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுதா அளித்த புகாரின் பேரில், நாகை நகர போலீஸாா் ஷீலா, காவியபிரியா, கதிரவன் ஆகியோரை கைது செய்தனா்.