நாகப்பட்டினம்
போக்ஸோவில் கைதான தலைமைக் காவலா் பணிநீக்கம்
நாகை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதான தலைமைக் காவலரை பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
நாகை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதான தலைமைக் காவலரை பணிநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
நாகை மாவட்டம், திட்டச்சேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிவா் குணா. இவா், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த அக். 30-ஆம் தேதி போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், குணாவை பணிநீக்கம் செய்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
